Sunday, August 14, 2022

ஸ்ரீ சேஷாத்திரி சிவனார் அருளிச்செய்த ராகத்துவேஷப் பிரகரணம்

கணபதி துணை.

திருச்சிற்றம்பலம்.

ராகத்துவேஷப் பிரகரணம்

பிறைசை அருணாசல சுவாமிகள் உரையுடன்.


குரு ஸ்துதி

ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं
द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् ।
एकं नित्यं विमलमचलं सर्वधीसाक्षिभूतं
भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि ॥

ப்ரஹ்மாநந்தம் பரமஸுகதம் கேவலம் ஞானமூர்த்திம்
விஸ்வாதீதம்# ககநஸத்ருஸம் தத்வமஸ்யாதி லக்ஷ்யம்
ஏகம்நித்யம் விமலமசலம் ஸர்வதீஸாக்ஷீ பூதம்
பாவாதீதம் த்ரிகுணரஹிதம் ஸத்குரும்தம் நமாமி.(1)

(இதனது பொருள்) ப்ரஹ்மாநந்த ஸ்வரூபமாகியும், சிரேஷ்டமான சுகத்தைக் கொடுப்பதாகியும், நிர்விகாரமாகியும், ஞானவடிவமாகியும், பிரபஞ்சாதீதமாகியும், ஆகாசத்துக்குச் சமானமாகியும், மஹாவாக்கியங்களுக்கு இலட்சியார்த்தமாகியும், ஒன்றாகியும், நித்தியமாகியும், நின்மலமாகியும், அசைவற்றதாகியும், எப்போதும் சாக்ஷிமாத்திரமாகியும், பாவனைகளுக்கு அப்பாற்பட்டதாகியும், முக்குணங்களும் இல்லாததாகியும் இருக்கின்ற சற்குருவை நமஸ்காரம் பண்ணுகிறேன்.
#பாடபேதம்: துவந்துவாதீதம் - இருமைக்கு அப்பாற்பட்டதாகியும்

(இதுவுமது)

மூகாம்பிகாகடாக்ஷாந் மோஹவிஹீநம் கரோதிஸிஷ்யம்ய:
ஏகாத்மகம்ஸேஷகிரீஸ மஸேஷவேதாந்த தேசிகம்வந்தே (2)

(இதனது பொருள்) மூகாம்பாளது கடாக்ஷத்தினாலே சீடனை மோகத்தினின்றும் விடுவித்தவராகியும், ஏகஸ்வரூபராகியும், சமஸ்தமான உபநிடதங்களுக்கு ஆசிரியராகியும் இருக்கின்ற சேஷகிரீசரென்னும் நாமதேயத்தை உடைய ஆசாரியரை நமஸ்காரம் பண்ணுகிறேன்.


சத்தப் பிரகரணம் - அறிமுகம்

தனது நித்தியானந்த சுயம்பிரகாசத்தினின்று ஓரறிவு சங்கற்பமாகத் தோன்றிப் பகிர்முகமானவிடத்துண்டான அறிவறியாமையே பிரகிருதி மகத்துவமெனவும், அவற்றினின்றும் விகற்பித்தெழாநின்ற அறிவின் அறிவறியாமையே மாயை அவித்தையெனவும், அவற்றிற் பிரதிபலித்த ஜீவேஸ்வர சங்கற்ப விகற்பமே ஞான முதலிய இருபத்தைந்து தத்துவங்களெனவும், அவற்றினின்றும் சங்கற்ப ரூபமாகப் பரிணமித்ததே பஞ்சபூத பௌதிகமெனவும், அவற்றைச் சங்கற்ப விகற்ப ரூபமான சித்தவிருத்தியால் வருகிற ராகத்துவேஷங்களால் அனுபவிக்கும் சுகதுக்கங்களே விடயமெனவுந் தோற்றிய அத்தியாரோபத்தை அபவாதத்தான் முன்னுண்டான முறைமைப்படி அடக்கித் தனது நிசானந்தத்தை வெளிப்படுத்தும் நிமித்தம் அருளே திருமேனியாக எழுந்தருளிய சேஷாத்திரி சிவனார் என்னும் ஞானாசாரியர் சங்கற்ப விகற்பத்தினால் விருப்புண்டாய் அதனால் விடையங்களிற் சுழலாநின்ற சித்தத்தின் விருத்தியைக் கெடுத்து அதற்குச் சுத்தி உண்டாக்கும் பொருட்டு அவ்விருப்பு வெறுப்பை ராகத்துவேஷப் பிரகரணம் எனவும், அச்சித்த சுத்தி உண்டானவிடத்து யதார்த்தத்தைக் காண்பதற்கு ஏதுவாகத் தோற்றின குறியைத் தெரிவித்தற் பொருட்டு அதனைச் சாதன சதுஷ்டயப் பிரகரணம் எனவும், அவை உதித்தவிடத்துப் பஞ்சபூத பௌதிக முதலிய அனைத்தும் சடமெனத் தெரிவித்தற் பொருட்டு அவற்றைத் தூலப் பிரகரணம் எனவும், அவைகள் சடமானவிடத்து அவைகளை மேற்சித்தைக் கொண்டு அசைப்பிக்கும் அந்தகரணங்களைச் சடமென்று அறிந்து அவைகளை நீக்குதற் பொருட்டு அவற்றைச் சூக்குமப் பிரகரணம் எனவும், அவைகள் அடங்கினவிடத்து இவைகட்குக் காரணமான மாயை அவித்தையை (யரோபிதம்) அரோபிதம் என்று அறிந்து அகற்றும் பொருட்டு அவற்றைக் காரணப் பிரகரணம் எனவும், அவைகள் நீங்கினவிடத்து எதிரிட்ட ஜீவேஸ்வரர்களை மறைத்த மகத்துவம்புரசிவிதிகளைச் சிற்பிரகாசமாக நீக்குதற் பொருட்டு அவைகளை மகாகாரணப் பிரகரணம் எனவும், இவைகள் அனைத்தும் தற்பிரகாசமாக நீங்கினவிடத்துத் தனது சுயம்பிரகாசமாக விளங்காநின்ற நித்தியானந்தமோமது ஸ்வரூபமெனத் தெரிவிக்கும் பொருட்டு அதனை நிசானந்தானுபூதிப் பிரகரணம் எனவும் பகுத்துக் கூறிய ஏழு பிரகரணங்களாம். இங்ஙனம் முறையாகக் கூறத் தொடங்கிய இப்பிரகரணங்களுண் முந்தின பிரகரணத்தில் ராகத்துவேஷாதிகளின் ஸ்வரூபத்தை நிரூபிக்கிறார்.


ராகத்துவேஷப் பிரகரணம்

(சுலோகம்)
காமாத்யா: ஷோடஸகுணா ஹேயோபா தேயதாம்கதா:
தேஷாம்ஸ்வரூபம் ப்ரதமம் தாவத்தத்ர நிரூப்யதே (3)

ராகத்துவேஷாதிகளின் சொரூபத்தை நிரூபிக்கின்றார். அவையாவன.

காமமுதற் பதினாறு குணங்களில் ராகமுதற் பதின்மூன்றுந் தள்ளத்தக்கனவும் இச்சை முதன் மூன்றுங் கொள்ளத்தக்கனவுமாம். அவைகளின் ஸ்வரூபம் நிரூபம் நிரூபிக்கப்படுகின்றது. ராகத்தின் அம்சமே காமமாதலால் காமாதியெனக் கூறினார். இப்பதின்மூன்றும் ராகத்துவேஷங்களின் பரியாயமெனக் கொள்க.

எந்த ராகத்துவேஷங்களினால் திரிவித கரணங்களும் திரிவித கன்மங்களைச் செய்கின்றதோ அந்த ராகத்துவேஷங்களின் குணங்களை நிரூபிக்கின்றோம். அவையாவன? ராகம் - துவேஷம் - காமம் - குரோதம் - லோபம் - மோகம் - மதம் - மச்சரம் - ஈரிஷை - அசூயை - டம்பம் - தர்ப்பம் (தற்பம்) - அகங்காரம் - எனப் பதின்மூன்றாம். இப்பதின்மூன்றும் மோட்சம் அடைவதற்கு விக்கினமாய் இருக்கின்றபடியால் இவற்றை முமுட்சுவானவர்கள் காலத்திரயங்களிலும் பரிசியாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

(இவைகளின் விபரம்)
ராகம் (விருப்பு, ஆசை): பரஸ்திரீ கமனம் பண்ண வேண்டுமென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு ராகமென்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் இராவணன் பரதாரமான சீதையம்மனை இச்சித்த ராகத்தினால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னஞ் சகோதரரான சுந்தோபசுந்தா (सुन्द, उपसुन्‍द) இருவருந் திலோத்தமையைக் கண்டு உன்பாரி என்பாரி என்று அடித்துக் கொண்டு இறந்ததும், இன்னம் அநேகம் பேர் இந்த ராகத்தினால் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்களும் இந்த ராகத்தினால் அநேக துக்கம் அனுபவிப்பதை பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த ராகம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த ராகத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

துவேஷம் (வெறுப்பு): இப்படியே தனக்கொருவன் அபகாரம் பண்ணினால் அவனுக்குப் பதில் அபகாரம் பண்ண வேண்டுமென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குத் துவேஷமென்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விட்டுவிடவேண்டியது என்றால் பூருவத்தில் இரணியகசிபன் தன் தமையனைக் கொன்ற நாராயணனைக் கொல்லவேண்டுமென்ற துவேஷத்தினால் அவனுடைய பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்திகள் இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் அநேகம் பேர் இந்தத் துவேஷத்தினால் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்களும் இந்தத் துவேஷத்தினால் அநேக துக்கம் அனுபவிப்பதை பிரத்தியட்சமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்தத் துவேஷம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்தத் துவேஷத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

காமம்: இப்படியே புத்திர மித்திர களத்திர கிரகக் கிராம க்ஷேத்திர தனதான்யாதிகண் மேன்மேலும் சம்பாதிக்க வேண்டுமென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குக் காமமென்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் நரகாசுரன் லக்ஷம் ஸ்திரீகளைக் கலியாணஞ் செய்வதற்காசித்துத் தேவ ஸ்த்ரீகள் பதினாயிரம் பேர்களைச் சிறைபிடித்து வந்ததைக் கேட்ட ஸ்ரீகிருஷ்ணமூர்த்தியால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான துக்கங்கள் அனுபவித்ததும், இன்னும் அநேகம் பேர் இந்தக் காமத்தினால் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்களும் இந்த காமத்தினால் அநேக துக்கம் அனுபவிப்பதைப் பிரத்தியட்சமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்தக் காமமிருந்தால் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்தக் காமத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

குரோதம்: இப்படியே தனக்கு வேண்டிய காரியங்களில் ஒருவன் விக்கினம் பண்ணினால் அவனிடத்தில் ஆக்கிரகமாக (ஆக்கிரகம்-கடுங்கோபம்) விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குக் குரோதம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் பகாசுரன் தனது புசிப்பிற்கு விக்கினம் செய்த வீமராஜன் பேரிற் குரோதம் வைத்ததனால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னம் அநேகம் பேர் இந்தக் குரோதத்தினால் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்தக் குரோதத்தினால் துக்கம் அனுபவிக்கிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்தில் இந்தக் குரோதம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்தக் குரோதத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

லோபம்: இப்படியே தான் சம்பாதித்தப் பதார்த்தங்களில் ஒருத்தருக்கொரு காசளவு செலவு பண்ணலாகாதென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு லோபம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் துரியோதனனானவன் சூதாடிக்கெலித்த (கெலித்தல்-வெல்லுதல்) பாண்டவர்களுடைய ராச்சியத்தில் அவர்கள் வசிக்கக்கூட இடம் கொடுக்கமாட்டோம் என்ற லோபத்தினால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த லோபத்தினால் அநேக துக்கம் அனுபவிப்பதும் பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த லோபம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த லோபத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

மோகம்: இப்படியே தான் சம்பாதித்தப் பதார்த்தங்களின் பேரிற் பிரியமோதப் பிரமோதமாய் விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குக் மோகம் என்று பேர். இந்த மோகத்தை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் தசரத மகாராஜன் தனது ஜேஷ்ட புத்திரனான ஸ்ரீராமன் பேரில் வைத்த மோகத்தினால் அவர் மாதுரு வாக்கிய பரிபாலன நிமித்தம் காட்டுக்குப் போனவதனால் இவர் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த மோகத்தினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த மோகத்தினால் அநேக துக்கங்கள் அனுபவிக்கிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த மோகம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த மோகத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

மதம்: இப்படியே ஐசுவரியர் தமக்குள் மதத்தினாற் கெர்வித்து கிருத்தியாகிருத்தியந் (கிருத்திய-செய்யத் தகுந்த செயல், அகிருத்திய-செய்யத் தகாத செயல்) தெரியாமல் விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு மதம் என்று பேர். இந்த மதத்தை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் கார்த்த வீர்யார்ச்சுனனானவன் தன்னிடத்தில் வந்த மகாரிஷியான நாரதரை மதித்து உபசாரம் பண்ணாமல் கெர்வித்திருந்ததைக் கேட்ட பரசுராமனால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த மதத்தினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த மதத்தினால் அநேக துக்கம் அனுபவிக்கிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த மதம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த மதத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

மச்சரம் (பொறாமை): இப்படியே ஒருத்தர் சுகமாயிருந்தால் அவர்களைப் பார்த்துச் சகிக்காமல் விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு மச்சரம் என்று பேர். இந்த மச்சரத்தை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் சிசுபாலனானவன் தருமராஜன் ராஜசூய யாகத்தில் அக்கிரதாம்பூலம் (முதற்கொடுக்கும் தாம்பூல மரியாதை) வாங்கத் தக்கவராரென்று விசாரித்து ஸ்ரீகிருஷ்ணசுவாமிக்குக் கொடுத்ததைச் சகிக்காமல் மச்சரப்பட்டதினால் அவனுடைய பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த மச்சரத்தினால் அநேகம் பேர் துக்கமே அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த மச்சரத்தினால் துக்கமே அனுபவிக்கிறது பிரத்தியட்சமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த மச்சரம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த மச்சரத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

ஈரிஷை: இப்படியே தனக்கு வந்த துக்கம் பிரத்தியாருக்கு வரலாகாதா என்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு ஈரிஷை என்று பேர். இந்த ஈரிஷையை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் அருணாக்ஷதனானவன் தனக்கு வந்த துக்கம் தனது இஷ்டனான வாணாசுரனுக்கு வரலாகாதாவென்று எதிர்த்த ஈரிஷையினால் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த ஈரிஷையினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த ஈரிஷையினால் துக்கமே அனுபவிக்கிறது பிரத்தியட்சமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த ஈரிஷை இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த ஈரிஷையை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

அசூயை: இப்படியே தனக்கு வந்த சுகம் பராளுக்கு வரலாமாவென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு அசூயை என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் பவுண்டரீக வாசுதேவனானவன் தனக்கும் வாசுதேவன் கிருஷ்ணனுக்கும் வாசுதேவன் என்று பேரா என்கிற அசூயையினால் அவரிடத்து எதிர்த்துப் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் அநேகம் பேர் இந்த அசூயையினால் துக்கமே அனுபவித்தும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்களும் இந்த அசூயையினால் துக்கமே அனுபவிப்பதும் பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்தில் இந்த அசூயை இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த அசூயையை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

டம்பம்: இப்படியே தான் பண்ணின தருமத்தை நாலுபேரும் பார்த்து பளா (பளா-அதிசயக் குறிப்பு) நன்றாயிருக்கின்றதென்று சொல்லவேண்டுமென்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு டம்பம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் நபூருவ மகாராஜனானவன் துருவாச ரிஷியைப் பார்த்து நான் செய்த யாகங்களைப் போல யார் செய்யப் போகிறார்கள் இது நன்றாயிருக்கிறதே என்று கேட்க யானைத் துதிக்கைப் போல ஆயிரம் வருஷம் நெய் சொரிந்து யாகம் செய்தவனும் இப்படிக் கேட்கவில்லை ஈதென்ன டம்ப யாகமென்று சொன்னவரைக் கோபித்து அவனது யாகத்தோடும் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த டம்பத்தினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்தும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த டம்பத்தினால் துக்கமே அனுபவிப்பதும் பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த டம்பம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த டம்பத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

தர்ப்பம் (தற்பம்-கர்வம்): இப்படியே புத்திர மித்திர களத்திர தனதானியாதி சம்பத்துத் தனக்கே உண்டு தனக்கு ஒருத்தரும் சமானமில்லை என்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்குத் தர்ப்பம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் சதகந்தரனானவன் ஐசுவரியத்தில் தனக்கு ஒருத்தரும் சமானமில்லை என்று அமரர்களுக்கு உபத்திரவம் செய்ததை நாரதர் ராமருக்கு அறிவிக்க அவர் பாரியான சீதையம்மனால் அவன் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த தர்ப்பத்தினால் அநேகம் பேர் துக்கமே அனுபவித்தும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்தத் தர்ப்பத்தினால் துக்கமே அனுபவிப்பது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த தர்ப்பம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்தத் தர்ப்பத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

அகங்காரம்: இப்படியே அடா! என்னை அறியாயா? நான் பிடித்த காரியம் விடுவேனா? நீயா எனக்குப் புத்தி சொல்லுகிறவன்? என்று விகற்பித்து வருகிற சித்தவிருத்திக்கு அகங்காரம் என்று பேர். இதை முமுட்சுவானவர்கள் காலத்திரயத்திலும் இல்லாமற் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது. ஏன் விடவேண்டியது என்றால் பூருவத்தில் மது கைடவர் என்பவர்கள் மஹாவிஷ்ணுவோடு பதினாயிரம் வருஷம் யுத்தம் செய்து இளையாமல் அவர் வரங்களுக்கு யாசியாமல் தாங்கள் அந்த விஷ்ணுவுக்கு வரங்கொடுத்த அகங்காரத்தினாற் பிராணஹானி, பந்து நாசம், ராச்சியஹானி, இகபரங்களில் அபகீர்த்தி இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவித்ததும், இன்னும் இந்த அகங்காரத்தினால் அநேகம் பேர் துக்கம் அனுபவித்ததும் சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்போதிருக்கிற பேர்கள் இந்த அகங்காரத்தினால் துக்கமே அனுபவிப்பதும் பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களிடத்திலும் இந்த அகங்காரம் இருந்தாற் துக்கமே அனுபவிப்பார்கள் என்று தோற்றுகிறபடியினாலும் இந்த அகங்காரத்தை முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

இந்த ராக முதல் அகங்காரம் ஈறான பதின்மூன்று குணங்களினால் இராவணன் முதல் மது கைடவான் ஈறான பேர்கள் மஹா சமர்த்தர்களாய் இருந்தும் அவர்கள் பிராண ஹானி முதலான அநேக அநர்த்தம் கண்முன் அனுபவித்தது சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் இப்படியே சத்திய வர்த்தமான காலத்திலும் இந்த ராகாதி குணங்களால் அநேக ஜனங்கள் பிராண ஹானிகளும் - அநேக ரோகங்களும் - அநேக திரவிய நாசங்களும் - பந்துக்கள் விரோதங்களும் - அபகீர்த்திகளும் இவை முதலான அநேக அநர்த்தங்கள் அனுபவிக்கிறது பிரத்தியக்ஷமாகக் கண்டிருக்கிறோமானபடியினாலும், இனிப் பிறக்கப் போகிற பேர்களும் இந்த ராகாதி குணங்களினின்று விடுபடாமற் போனார்களாகில் இப்படியே அநேக அநர்த்தங்கள் அனுபவிப்பார்கள் என்று தோற்றப்படுகிறபடியினாலும் இந்த ராகாதி பதின்மூன்று குணங்களும் மோக்ஷ மார்க்கத்துக்குச் சத்துருவாய் இருக்கிறபடியினாலும் ஜனனமரணப் பிரவாக ரூபமான நரகத்துக்கு ஏதுவாய் இருக்கிறபடியினாலும் - இப்பதின்மூன்று குணங்களையும் முமுட்சுவானவர்கள் சர்வாத்மனா விட்டுவிடவேண்டியது சித்தம்.

இவைகளால் உண்டான ஜனன மரணமே நரகமென்பதாம். இதற்கு சமுசயமில்லை. ஜனன மரண ரூபமான தேகமே நரகமென்பதற்கு பிரமாணம். எங்கே சரீரம் உண்டோ அங்கே எல்லாம் துக்கமுண்டு. எங்கே சரீரம் இல்லையோ அங்கே எல்லாம் துக்கமில்லை என்று வேதத்தில் சொல்லியிருக்கிறபடியினால் இந்தச் சரீரமே சகல துக்கங்களுக்கும் சகல அநர்த்தங்களுக்கும் ஏதுவாக இருப்பதினால் இந்தச் சரீரமே நரகமென்று சொன்னது சித்தம். ஆதலால் இந்தச் சரீரத்துக்கு ஏதுவான இப்பதின்மூன்று குணங்களையும் முமுட்சுவாயிருக்கப்பட்ட பேர்கள் அவசியம் விட்டுவிடவேண்டியது சித்தம்.

இனிக் கொள்ளத்தக்கவைகளான இச்சை முதன் மூன்று குணங்களையும் நிரூபிக்கிறோம். அவையாவன?

இச்சை: பசி தாக நிமித்தம் அன்னபானாதி கிராகியமும் (அன்னம்-சோறு, பானம்-நீர், கிராகியம்-கொள்ளத்தக்கது), மலமூத்திர விசர்ச்சனமும் பண்ணவேண்டும் என்று வருகிற சித்தவிருத்திக்கு இச்சை என்று பேர். இவை பண்ணாமற் போனாற் துக்கமும், பண்ணினாற் சுகமுமாய் இருக்கும். இதனாற் பந்த மோக்ஷம் சுவர்க்க நரகமில்லை ஆதலாற் கொள்ளத்தக்கதாம்.

பத்தி (பக்தி): இப்படியே மகாதேவரிடத்தில் பிரியம் வருகிற சித்தவிருத்திக்குப் பத்தி என்று பேர்.

சிரத்தை: குரு வேதாந்த சாத்திரங்களின் மிகவும் விசுவாசம் வைத்த சித்தவிருத்திக்குச் சிரத்தை என்று பேர்.

இந்தப் பத்தி சிரத்தை முத்தியை அடைவிப்பதற்கு ஏதுவாதலினாலும் பூருவத்திற் கட்டுவாங்கதன் என்கிற மகாராஜன் இந்தச் சிரத்தாபத்தியினால் இரண்டு நாழிகையின் முத்தியை அடைந்தான் என்று சாத்திரங்களிற் கண்டிருக்கிறோமானபடியினாலும் முமுட்சுவானவர்கள் இந்தச் சிரத்தாபத்தி அவசியம் பண்ணவேண்டியது சித்தம். ராகாதி பதினாறு குணங்களும் நிரூபிக்கப்பட்டன.

ராகத்துவேஷப்பிரகரணம் முற்றுப் பெற்றது.

Thursday, August 4, 2022

மங்கல வாழ்த்து

எடுத்துக்கொண்ட நூல் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டும், படிப்போர்க்குத் தம்மிடத்தில் நாஸ்திகப்பிராந்தி நீங்குதற் பொருட்டும், நூன்முகத்திற் செய்யப்படும் வாழ்த்து மங்கலம் எனப்படும். அது வஸ்து நிர்தேசம் (பொருள் இயல்பு உரைத்தல்), நமஸ்காரம் (வணக்கம்), ஆசீர்வாதம் (வாழ்த்து) என மூவகைத்தாம். 

(1) வஸ்து நிர்தேச (वस्तुनिर्देश) மங்கலம்: நமஸ்கார முதலியனவின்றிக் கேவலம் கடவுளின் சங்கீர்த்தனம் (ஸ்துதி) வாஸ்து நீர்த்தேச வடிவ மங்கலமாம்.

(2) நமஸ்கார வடிவ மங்கலம்: நமஸ்காரத்திற்குத் தகுதியான கடவுள், குரு முதலியோரிடத்து நமஸ்காரஞ் செய்பவன் தனதிழிதகைமையை உணர்த்துதற்பொருட்டு மனோவாக்குக் காயமென்னுந் திரிகரணங்களாலுஞ் செய்யப்படும் வியாபார விசேடம் நமஸ்கார வடிவ மங்கலமாம். 

(3) ஆசீர்வாத வடிவ மங்கலம்: நூலாசிரியர் தாம் விரும்பிய பொருளையும் தமது மாணாக்கர் விரும்பிய பொருளையும் அடைதற்பொருட்டுக் கடவுளைப் பிரார்த்தித்தல் ஆசீர்வாத வடிவ மங்கலமாம்.

இவற்றின் அவாந்தரபேதம் இருபத்தேழாம். 

Monday, August 1, 2022

நந்தி இறைவனிடம் கேட்ட பதினாறு பேறுகள்

சிவபெருமான், நந்தி பகவானுக்கு பட்டாபிஷேகம் செய்து கணங்களின் தலைவனாக நியமித்தபோது, சிவனடியார்கள் வேண்டும் பதினாறு பேறுகளை வரமருள வேண்டும் என்று இறைவனிடம் கேட்டுக்கொண்டார் நந்தீஸ்வரர்.

சிவபெருமான் சன்னிதானத்தில் திருநந்திதேவர் விண்ணப்பஞ் செய்த 16 பேறு

கலிநிலைத்துறை 

மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனமும்
தறுகண் ஐம்புலன்களுக்கேவல் செய்யுறாச் சதுரும்
பிறவி தீதெனாப் பேதையர் தம்மொடு பிணக்கும்
உறுதி நல்லறஞ் செய்பவர் தங்களோ டுறவும்

யாதுநல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும்
மாதவத்தினோர் ஒறுப்பினும் வணங்கிடு மகிழ்வும்
ஓது நல்லுப தேச மெய் யுறுதியும் அன்பர்
தீது செய்யினும் சிவச்செயல் எனக் கொளுந் தெளிவும்

மனமும் வாக்கும் நின்னன்பர்பால் ஒருப்படு செயலும்
கனவிலும் உனத
ன்பருக் கடிமையாங்* கருத்தும்
நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும்
புனித நின்புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொலிவும்

தீமையாம் புறச்சமயங்கள் ஒழித்திடு திறனும்
வாய்மை யாகவே பிறர்பொருள் விழைவறா வளனும்
ஏமுறும் பரதாரம் நச்சிடாத நன்னோன்பும்
தூய்ம்மை நெஞ்சில் யான் எனதெனும் செருக்குறாத் துறவும்.

கலிவிருத்தம்
துறக்கமீ துறைகினும் நரகில் தோய்க்கினும்
இறக்கினும் பிறக்கினும் இன்பம் துய்க்கினும்
பிறைக்கொழுந் தணிசடைப் பெரும இவ்வரம்
மறுத்திடா தெனக்குநீ வழங்கல் வேண்டுமால்.

*கனவிலும் உனதடியருக் கன்பராங் கருத்தும்

16 பேறுகள்:

1. வேதங்களையும் சைவத்தையும் நிந்தனை செய்வதைப் பொறாத மனம்.
2. ஐம்புலன்களுக்கு அடிமையாகி அவற்றுக்காகப் பணி செய்யாத நிலை.
3. பிறவி என்பது தீதென்று கருதி உலக சுகத்தைப் பெரிதென்று கருதும் பேதையரை விலகி நிற்கும் உறுதி.
4. நல்லறங்களைச் செய்தவர்களுடன் உறவு.
5. நல்லவர்கள் என்ன கேட்டாலும் உதவி செய்கின்ற இயல்பு.
6. அரும்தவம் செய்தோரை வணங்கிடும் பண்பு.
7. நல்ல உபதேசங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை.
8. அன்பர்கள் தீது செய்தாலும் அவற்றை சிவச்செயல் என ஏற்கும் தெளிவு.
9. மனமும் வாக்கும் அன்பர்பால் ஒருமைப்படும் செயல்.
10. கனவிலும் சிவனடியார்க்கு அடிமை யாதல்.
11. சிவபெருமானைத் தவிர வேறுயாரையும் கடவுளாக வழிபடாத நிலை.
12. சிவபெருமானின் புகழை நாள்தோறும் உரைத்திடும் பொலிவு.
13. பிற சமயங்களை விட்டு விலகி நிற்கும் ஆற்றல்.
14. பிறர் பொருள்மீது ஆசை ஏற்படாமை.
15. நல்ல நோன்புகளை நோற்றிருத்தல்.
16. நான், எனது என்னும் செருக்கும் சுயநலமும் இல்லாமை.

ஸங்கல்பத்தில் 16 பேறு

எந்த ஒரு வழிபாடும் ஆரம்பிக்கும்போது 'இதற்காக இந்தப் பூஜை பண்ணுகிறேன்' என்று 'ஸங்கல்பம் (mental resolve, vow, determination)' செய்து கொள்ள வேண்டும். 'எதற்காக' என்றால், ஸஹ குடும்பம் (தன் குடும்பம் முழுதும்). 

க்ஷேமம் (சுகம், well-being, happiness, prosperity)
ஸ்தைர்யம் (ஸ்திரத் தன்மை, Stability)
வீர்யம் (வலிமை, (உடல்) பலம், strength, vigor, power)
விஜயம் (வெற்றி, victory, success)
ஆயுஸ் (ஆயுள், வாழ்நாள், lifetime)
ஆரோக்கியம் (நோயின்மை, freedom from disease)
ஐஸ்வர்யம் ((பல வகையான) செல்வம், wealth)

ஆகிய எல்லாவற்றிலும் அபிவிருத்தி (முன்னேற்றம்) காண்பதற்காக என்று ஏழு விஷயங்களைச் சொல்லி, அப்புறம்

தர்ம (அறம், dharma, ethics) - அர்த்த (பொருள், artha, securities, wealth) - காம (இன்பம், kama, pleasures) - மோக்ஷம் (வீடு, moksha, liberation) என்று நான்கு புருஷார்த்தங்கள் ஸித்திப்பதற்காகவும் - ஏழும் நான்கும் பதினொன்று. அப்புறம்,

இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம் என்பதற்காக எண்ணங்களின்/மனவிருப்பங்களின் பூர்த்தியை (நிறைவு, முழுமை) வேண்டி என்று ஒன்று - இதோடு பன்னிரண்டு. 
அப்புறம், 

ஸமஸ்த (அனைத்து) மங்களங்களும் கிடைப்பதற்காக, ஸமஸ்த துரிதங்களும் (பாபங்களும்) ஒடுங்கிப் போவதற்காக என்று மேலும் இரண்டைக் கூட்டி, இதோடு பதினான்கு. அப்புறம்,

புத்ர பௌத்ரர்கள் அபிவிருத்தியாவதற்காக என்று பதினைந்தாவது; கடைசியாக எந்த ஸ்வாமிக்குப் பூஜையோ அவருக்கு ப்ரீதி (திருப்தி, மனநிறைவு, மகிழ்ச்சி) ஏற்பட்டு அவர் ப்ரஸாதத்தால் நம் விருப்பம் எல்லாம் நிறைவேற வேண்டும் என்று பதினாறு விஷயங்களைப் ப்ரார்த்தித்து ஸங்கல்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதில் லௌகிகம் அதிகம் இருக்கிறதென்று நினைப்பவர்கள் முடிவாக, இன்னும் இரண்டு சேர்த்துக் கொள்வார்கள். ஞானம், வைராக்யம் என்ற இரண்டு ஸித்திப்பதற்காக (ஞான வைராக்ய ஸித்யர்த்தம்) என்று சேர்த்துக் கொள்வார்கள்.

Sunday, July 31, 2022

நவக்கிரகப் பாடல்கள் - 2

சூரியன்
ஞாலம் காக்கும் ஞாயிறே போற்றி
நாளும் நன்றே நல்குவாய் போற்றி
சீலம் எல்லாம் சேர்ப்பாய் போற்றி
காலம் முழுவதும் அருள்வாய் போற்றி

சந்திரன்
பிங்கலன் அணிந்த திங்களே போற்றி
எங்குலம் தழைத்திட எழுவாய் போற்றி
கங்குலில் ஒளியினைப் பொழிவாய் போற்றி
மங்களம் நிறைந்திட அருள்வாய் போற்றி

செவ்வாய்
செவ்விய நிறத்து செவ்வாய் போற்றி
திவ்விய சுகமதை தருவாய் போற்றி
கவ்விய வினைகளைக் களைவாய் போற்றி
அவ்வியம் அகன்றிட அருள்வாய் போற்றி

புதன்
புண்ணிய திருமக புதனே போற்றி
நுண்ணிய கலைகளை அளிப்பாய் போற்றி
எண்ணிய பணிகளை முடிப்பாய் போற்றி
திண்ணிய பயன்களை அருள்வாய் போற்றி

குரு
வளமெலாம் அளித்திடும் வியாழா போற்றி
குலமெலாம் தழைத்திட வருவாய் போற்றி
புலமெலாம் மலர்ந்திட முனைவாய் போற்றி
உலகெலாம் உவந்திட அருள்வாய் போற்றி

சுக்கிரன்
துணைநலம் அருளும் சுக்ரா போற்றி
மனையறம் தழைத்திட வருவாய் போற்றி
இணையிலா பொருளை கொடுப்பாய் போற்றி
வினையெலாம் விலகிட அருள்வாய் போற்றி

சனி
சகலரும் துதித்திடும் சனியே போற்றி
புகலரும் துயரம் துடைப்பாய் போற்றி
நிகரில்லாப் புகழினைத் தருவாய் போற்றி
செகமெலாம் நலம் பெற அருள்வாய் போற்றி

ராகு
தண்மதி விழுங்கிய ராகுவே போற்றி
துன்மதி நினைப்பினை அறுப்பாய் போற்றி
என்மதி துலங்கிட முயல்வாய் போற்றி
நிம்மதி நிலவிட அருள்வாய் போற்றி

கேது
நிறைமதி குறைத்த கேதுவே போற்றி
தலைவிதி எழுத்தை கலைப்பாய் போற்றி
பிறைபோல் சூழ்நலம் வளர்ப்பாய் போற்றி
குறையெலாம் மறைந்திட அருள்வாய் போற்றி

நவக்கிரகத் தோத்திரம்

காப்பு
மண்ணு ளுயிர்கட் கனைத்து மாறாதளித்துநல
நண்ணு நவக்கிரக நண்புசொலத் - தண்ணுலவு
திங்களணி தங்குமுகர் செஞ்சடையருண் மகிழ்செய்
கங்கையரு ளைங்கரனார் காப்பு

சூரியன்
காசினி யிருளை நீக்குங் கதிரொளியாகி யெங்கும்1
பூசனை யுலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி யேழுடைய தேர்மேன் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா வெனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி!

சந்திரன்
அலைகட லதனி னின்று மன்றுவந் துதித்த போது
கலைவளர் திங்களாகிக் கடவுள ரெவரு2 மேத்துஞ்
சிலைனுத லுமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்3 மேரு
மலை வலமாக வந்த மதியமே போற்றி! போற்றி!

செவ்வாய்
வசனநற் றைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்(கி)ரமங்கள் போர்தனில் வெற்றி யாண்மை
நிசமுட னவரவர்க்கு4 நீணிலந்தனி லளிக்குங்
குசனில மகனாஞ் செவ்வாய் குரைகழல் போற்றி! போற்றி!

புதன்
மதனனூன் முதலா நான்குமறை புகல் கல்வி ஞானம்
விதமுட னவரவர்க்கு விஞ்சைக ளருள்வோ(ன்) றிங்கள்
சுதன் பசுபாரிபாக்யஞ்5 சுகம்பல கொடுக்க வல்லன்
புதன் கவிப் புலவன் சீர்சால் பொன்னடி6 போற்றி! போற்றி!

குரு
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கரசன்7 மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் னாட்டினுக் கதிபனாகி
நிறைதனஞ் சிவிகை மண்ணி னீடுபோகத்தை நல்கு
மிறையவன் குருவியாழ மிருமலர்ப்8 பாதம் போற்றி!

சுக்கிரன்
மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய்9 வையங்
காக்கவான் மழை பெய்விக்குங் கவிமகன் கனகமீவோன்
றீர்க்க வானவர்கள் போற்றச் செத்தவர் தமையெழுப்பும்
பார்க்கவன் சுக்கிராசாரி பாத பங்கயமே10 போற்றி!

சனீஸ்வரன்
முனிவர்க டேவரே மும்மூர்த்திகள் முதலினோர்கள்11
மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமைய தல்லாதுண்டோ12
கனிவுள தெய்வ(ம்) நீயே கதிர்சேயே காகமேறுஞ்
சனியனேயுனைத் துதிப்பேன்13 றமியனேற்கருள் செய்வாயே!

ராகு
வாகுசேர் நெடுமான் முன்னம் வானவர்க் கமுத மீயப்
போகுமக் காலை யுன்றன் புணர்ப்பினாற் சிரமே யற்றுப்
பாகுசேர் மொழியாள் பங்கன் பரன்கையில் மீண்டு(ம்)பெற்ற
ராகுவே யுனைத் துதிப்பேன் ரட்சிப்பாய்14 ரட்சிப்பாயே!

கேது
பொன்னையி னுரத்திற் கொண்டோன் புலவர்தம் பொருட்டா லாழி
தன்னையே கடைந்து முன்னந் தண்ணமு தளிக்க லுற்ற
பின்னைநின் கரவானுண்ட15 பெட்பினிற் சிரம்பெற் றுய்ந்தா
யென்னையாள் கேதுவேயிவ் விருநிலம் போற்றத்தானே!

பொது
சூரியன் சோமன் செவ்வாய் சொற்புதன் வியாழம் வெள்ளி
காரியு மிராகு கேது கடவுள ரொன்பா னாமத்
தாரியல் சக்கரத்தைத் தரித்திரர் பூசித்தாலும்
பாரினிற் புத்திரரு மட்ட16 பாக்கிய(மு) நல்குந் தானே


பாடபேதம்
(1) யோங்கும்
(2) கடவுளென் றெவரு
(3) பிறையாம்
(4) னடியவர்க்கு
(5) 5.1 சுதன் கன பவுசு பாக்யஞ்/ சுதன் பவிசு பாக்கியங்கள்
      5.2 சுதன் பல சுபாசுபங்கள்
      5.3 சுதன் மாநிலத்தோ ரிச்சை
(6) பூங்கழல்
(7) வானவர்க்காசான்
(8) னிருமலர்ப்
(9) குருவாம்
(10) பங்கயங்கள்
(11) 11.1 முனிவர்க டேவரேழும் மூர்த்திகள் முதலினோர்கள்
        11.2 முனிவர் தேவரேழு மூர்த்திகள் முதலினோர்கள்
        11.3 முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள்
        11.4 முனிவர்கள் தேவர்கள் ஏழு(லக) மூர்த்திகள் முதலானோர்கள்
(12) மகிமைய தல்லாலுண்டோ / மகிமையல்லால் வேறுண்டோ
(13) சனி பகவானே போற்றி
(14) துதிப்பே னிட்கணம்
(15) கரவாலுண்ட
(16) புத்திர ருண்டாம்


பாடல் வேற்றுமைகள்
ராகு பகவான்
வாகுசேர் நெடுமான் முன்னம் வானவர்க் கமுத மீய
ஏகிநீ நடுவி ருக்க எழில்சிர மற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!

கேது பகவான்
மாதுசேர் நெடுமால் முன்னால் மாகிரி வலமே போந்து
நீதியால் நடுவகுத்து நிறைதளர் தந்தையைச் சீர்க்கும்
தீதுகள் யாவும் தீர்க்கும் சிவன்கையில் சிரமே பெற்ற
கேதுவே உனைத் துதிப்பேன் கீர்த்தியாய் ரட்சிப்பாயே!

மாதுசேர் நெடுமால் முன்னால் மாகிரி வலமே போந்து
கோதுகள் யாவும் தீரக் குருவருள் பாதம் போற்றி
மாதுசேய் கதிர் விழுங்கும் சிவன்கையில் சிரமே பெற்ற
கேதுவே உனைத் துதிப்பேன் கீர்த்தியால் ரட்சிப்பாயே!

மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க் கமுத மீயும்
போதுநீ நடுவிருக்கப் புகழ்சிர மற்றுப் பின்னர்
ஒதுறும் அரச நாகத்துயர் சிரமைந்து பெற்ற
கேதுவே போற்றி போற்றி கீர்த்தியாய் ரட்சிப்பாயே!

Saturday, July 30, 2022

நவக்கிரகப் பாடல்கள் - 1

சூரியன்
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுதந்திரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்!

சந்திரன்
எங்கள் குறைகள் எல்லாந் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு1 போற்றி
சங்கடந் தீரப்பாய் சதுரா போற்றி!

செவ்வாய்
சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலா தருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்கா ரகனே அவதிகள் நீக்கு!

புதன்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந்தந் தாள்வாய் பண்ணொலி2 யானே
உதவியே அருளும் உத்தமா போற்றி!

குரு
குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
க்ரஹதோஷ மின்றிக் கடாக்ஷித் தருள்வாய்!

சுக்கிரன்
சுக்கிர மூர்த்தி சுபமிக3 யீவாய்
வக்கிர மின்றி வரமிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க் கருளே!

சனி
சங்கடந் தீர்ப்பாய்4சனி பகவானே
மங்களம் பொங்க மனம்வைத் தருள்வாய்
சச்சர வின்றிச் சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தாதா!

ராகு
அரவெனும் ராகு ஐயனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆக அருள்புரி அனைத்திலும் வெற்றி
ராகுக் கனியே ரம்மியா போற்றி!

கேது
கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம்5 தீரப்பாய்
வாதம் வம்பு வழக்குக ளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி!


பாடபேதம்
(1) சற்குணா
(2) பண்ணொளி
(3) சுபசுக மீவாய்
(4) தீர்க்குஞ்
(5) பாவம்

Saturday, July 9, 2022

Swami Dayananda Saraswati (Arsha Vidya) - A non-exhaustive list of books in English

Pujya Sri Swami Dayananda Saraswati was a distinguished, traditional teacher of Vedanta. His depth of understanding and nuanced appreciation of both Eastern and Western cultures made him that rare teacher who could communicate the vision of non-duality to modern listeners. He was able to make one see, with immediacy, the truth of oneself as the whole.

Swami Dayananda taught Vedanta in India for more than four decades and around the world since 1976. Many of Swamiji's talks are available in audio, video and book format from Arsha Vidya Gurukulam, Anaikatti, Coimbatore, Arsha Vidya Pitham, Rishikesh, Arsha Vidya Gurukulam, Saylorsburg, PA and also in leading bookstores, online e-commerce sites. A select list of talks are available in Arsha Vidya Pitham YouTube channel.

Given below is a non-exhaustive list of books that were published based on Pujya Swamiji's talks. Some of the old titles (those printed before 2006) are not available in print and some of the titles have been edited and brought out as a revised or new edition by Arsha Vidya Research and Publication Trust (AVRPT), Chennai. Where a reference to revised or new edition from AVRPT is available, that is highlighted in blue for the respective book.

Note: Revised edition is similar to the old edition with revision or addition in the content and organization of the book. New edition with the same title is a totally new content based on a different set of talks.

Books published while Swamiji was part of Chinmaya Mission
  1. The Bhagavad Gita in Nineteen Talks, Central Chinmaya Mission Trust, Bombay 1979, PDF
  2. All About Sadhana, Chinmaya Publications West, 1979
  3. Tattva Bodha of Sankaracharya with notes prepared by Svarupa Chaitanya (from the discourses of H.H. Swami Dayananda), Central Chinmaya Mission Trust, Bombay, 1981/1986/1993, PDF

Books published by Vision Books, India
  1. Introduction to Vedanta, Vision Books, 1989, PDF
  2. The Teaching of the Bhagavad Gita, Vision Books, 1989, Borrow & Read Online

Swami Dayananda Saraswati Commemorative volume, Biography
  1. The Master Navigator, The Unique Link, His Cryptic Teaching, 60th Birthday Booklet, 1990, PDF
  2. Swami Dayananda Saraswati - Traditional Teacher of Brahma Vidya, 60th Birthday Commemorative volume by Smt. Padma Narasimhan, TTK Maps & Publications, 1990
    (Revised edition from AVRPT titled Swami Dayananda Saraswati - Teacher of Teachers, 2017)
  3. Swami Dayananda Saraswati - Contributions & Writings, 80th Birthday Tribute to Swamiji by Smt. Sheela Balaji, AVRPT, 2011, Read Online

Swami Dayananda Saraswati Books (from 1983 onwards)

The following books were published from 1983 and are listed here in the order of year of publication. Where possible, the publisher is also listed along with the year of publication.
The book title is highlighted in bold. In some places, a few notes are added (for e.g. who edited or compiled the book from Swamiji's talks).

  1. Talks on "Who Am I?", Sri Gangadhareswar Trust, 1983 (2nd ed.), (1st ed. published in 1982 by Gujarat University), PDF-1, PDF-2
  2. Pūrnamadah Pūrnamidam, Sri Gangadhareswar Trust, 1983 (Revised edition from AVRPT, 2014), PDF
  3. The Sadhana and The Sadhya, Sri Gangadhareswar Trust, 1984 (New edition from AVRPT, 2013), PDF
  4. The Value of Values, Sri Gangadhareswar Trust, 1984 (1st ed.), 1985 (2nd ed.), 1988 (3rd ed.), 1993 (4th ed.) (Revised edition from AVRPT, 2007), PDF-1, PDF-2, Borrow & Read Online
  5. The Teaching of Bhagavad Gita, Sri Gangadhareswar Trust, 1985
  6. The Problem is You; The Solution is You, Sri Gangadhareswar Trust, 1986 (Revised edition from AVRPT, 2007)
  7. Action and Reaction, Sri Gangadhareswar Trust, 1986 (Revised edition from AVRPT, 2007)
  8. Vedanta and Emotional Maturity, Ravindra Printing Press, 1986 (not much information about this book is available)
  9. Knowledge and Action, Sri Gangadhareswar Trust, 1987
  10. The Fundamental Problem, Sri Gangadhareswar Trust, 1987 (Revised edition from AVRPT, 2007)
  11. What is My Duty?, Sri Gangadhareswar Trust, 1987
  12. Crisis Management, Sri Gangadhareswar Trust, 1987 (Revised edition from AVRPT, 2007)
  13. Talks on Upadesa Saram, Sri Gangadhareswar Trust, 1987
  14. Dialogues with Swami Dayananda, Sri Gangadhareswar Trust, 1988
  15. Morning Meditation - Prayers, 1988 (Revised edition from AVRPT, 2009)
  16. Personnel Management, Sri Gangadhareswar Trust, 1989
  17. Bhagavad Gita Home Study - 2 Vol, AVG, Saylorsburg PA, 1989 (Revised edition from AVRPT in 9 volumes, 2011)
  18. Two Talks on Japa - Mantra Meditation, AVG Saylorsburg PA, 1989 (Revised edition titled Japa from AVRPT, 2009), Borrow and Read Online
  19. The Upanishads and Self-Knowledge, AVG, Saylorsburg PA, 1989/1990 (booklet), Borrow and Read Online
  20. Talks on Emotional Maturity, Sri Gangadhareswar Trust, 1990, PDF
  21. The Purpose of Prayer, AVG, Saylorsburg PA, 1991 (Revised edition from AVRPT, 2007)
  22. The Teaching Tradition of Advaita Vedanta, AVG, Saylorsburg PA, 1993, PDF (Revised edition from AVRPT, 2009)
  23. Surrender and Freedom, Sri Gangadhareswar Trust, 1994 (Revised edition from AVRPT, 2007)
  24. Talks on Sadhana and Sadhya, Arsha Vidya Kendra, Bangalore, 1995
  25. Vivekacudamani - Talks on 108 selected verses, Sri Gangadhareswar Trust, 1997 (Reformatted and reprinted by AVRPT, 2019)
  26. A Vedantin's view of Christian Concepts, Editor: Lasa Donnerberg, AVG, Saylorsburg PA, 1998, PDF Excerpt
  27. Kena Upanisad, edited by Swami Tadatmananda, AVG Saylorsburg PA, 1998
  28. Mahavakya Vicara, Sri Gangadhareswar Trust, 1999, PDF Excerpt
  29. Arsha Vidya - The Vision of the Rishis, Sri Gangadhareswar Trust, 1999, PDF
  30. Talks on Sri Rudram, Sri Gangadhareswar Trust, 1999 (Revised edition from AVRPT titled Sri Rudram, 2010)
  31. Compositions of Swami Dayananda Saraswati, Sruti Seva Trust, 1999 (2nd ed.), 1994 (1st ed.), (Revised edition from AVRPT, 2010), Listen online
  32. Freedom from Sadness, AVG, Saylorsburg PA (first published) and later reprinted by AVG, Anaikatti, Coimbatore, 1999
  33. In the Vision of Vedanta, Sri Gangadhareswar Trust, 2000
  34. Need for Cognitive Change, Arsha Vidya Kendra Trust, Bangalore, 2000 (New edition from AVRPT, 2010)
  35. Day After Day with Swami Dayananda Saraswati, Compiled by Dr. V. Swaminathan, AVG, Saylorsburg PA, 2000, PDF
  36. Talks and Essays of Swami Dayananda Volume 1 - A Collection, Compiled by Gyanakumari, Sri Gangadhareswar Trust, 2000 (Reformatted and Revised edition from AVRPT in 2 volumes, 2017)
  37. Vedanta - The Ultimate Therapy, 2000
  38. Adi Sankara's Sadhana Panchakam, Sri Gangadhareswar Trust (printed by Chengacherial Printers & Publishers, Chennai), 2001
  39. You are the Whole, AVG, Saylorsburg PA, 2001
  40. Isvara in One's Life, Sri Gangadhareswar Trust, 2001 (Revised edition from AVRPT, 2012)
  41. What is Meditation?, Sri Gangadhareswar Trust, 2001 (Revised edition from AVRPT, 2010)
  42. Personnel Re-engineering in Management, Arsha Vidya Kendra Trust, Bangalore, 2002 (Revised edition from AVRPT titled Need for Personal Reorganization, 2008)
  43. What You Love is the Pleased Self, AVG Saylorsburg PA, 2002
  44. Hinduism, AVG, Anaikatti, Coimbatore, 2003 (Revised edition from AVRPT titled Hinduism... its uniqueness, 2014)
  45. Satyam and Mithya, AVG Saylorsburg PA, 2003 (2nd ed.), 2002 (1st ed.)
  46. Self-Knowledge, AVG Saylorsburg PA, 2003
  47. Talks on Meditation, Arsha Vidya Bhavan, Pondicherry, 2003
  48. Taittiriya Upanishad as taught by Swami Dayananda Saraswati, Edited by John Warne, AVG, Saylorsburg PA, 2003
  49. Prayer Guide, Edited by Jayashree Ramakrishnan and Krishnakumar S. Davey, AVG, Saylorsburg PA, 2004 (Revised edition from AVRPT, 2008)
  50. Discovering Love (USA Talks), AVG Saylorsburg PA, 2004
  51. Bhagavad Gita Home Study - The Context of the Gita, Sri Gangadhareswar Trust, 2004
  52. Ramayana, Sruti Seva Trust, published by Arsha Vidya Bhavan, Pondicherry, 2004
  53. Om Namo Bhagavate Vasudevaya, 2004/2005 (Revised edition from AVRPT, 2010)
  54. Freedom in Relationship, AVG, Saylorsburg PA, 2005, PDF Excerpt, (New edition from AVRPT, 2008)
  55. Discourses on certain important topics, Dharma Rakshana Samiti, 2005
  56. Vedanta Vs. Psychology, Vijay Foundation, Mysore, 2006
  57. Talks and Essays of Swami Dayananda Volume 2 - A Collection, Compiled by Swamini Srividyananda, AVG, Saylorsburg PA, 2006
  58. Freedom from Fear, AVG, Saylorsburg PA, 2006
  59. Friendship - The Essence of Vedic Marriage, AVG, Saylorsburg PA, 2006, PDF Excerpt
  60. The Profile of a Wise Person, Arsha Vidya Bhavan, Pondicherry, 2006
  61. Vakyavrtti as taught by Swami Dayananda Saraswati, Edited by John Warne, AVG, Saylorsburg PA, 2007
  62. Tattvabodha, Sruti Seva Trust, 2009 (3rd ed.)
  63. Freedom from Stress, AVG Saylorsburg PA, 2009 (2nd ed.), 2002 (1st ed.)
  64. Freedom in "not from" Relationship, AVG Saylorsburg PA, 2009 (2nd ed.), 2005 (1st ed.)
  65. Swami Dayananda Saraswati, The Man, The Spiritual Leader, Arsha Vidya Publication - special edition, 2010
  66. An Interview with Pujya Sri Swami Dayananda Saraswati, Dr. V. Swaminathan, Swami Dayananda Satabhishekam Celebration Committee, 2010, PDF
  67. Visnusahasranama, Sruti Seva Trust, 2011 (4th ed.)
  68. Mandukya Upanishad as taught by Swami Dayananda Saraswati, Edited by John Warne, AVG, Saylorsburg PA, 2011
  69. Chandogya Upanishad as taught by Swami Dayananda Saraswati, Edited by John Warne, AVG, Saylorsburg PA, 2012
  70. Ramayana as taught by Swami Dayananda Saraswati, Edited by John Warne, AVG, Saylorsburg PA, 2012
  71. Mahabharata as taught by Swami Dayananda Saraswati, Edited by John Warne, AVG, Saylorsburg PA, 2012
  72. Brahmasutras as taught by Swami Dayananda, Edited by John Warne, AVG, Saylorsburg PA, 2013
  73. Spiritual Health, Vijay Foundation, Mysore, 2013 (2nd ed.), 2006 (1st ed.)
  74. Karma Yoga, Vivekananda Kendra Prakashan Trust, 2014 (2nd ed.)
  75. A Garland of Thoughts, AVG, Saylorsburg PA, 2015
  76. Examples Come Alive, AVG, Saylorsburg PA, 2018
  77. Moments with Krishna (booklet), (Reformatted and reprinted from AVRPT, 2010)
  78. Violence to Hindu Heritage (booklet), (Reformatted and reprinted from AVRPT titled Conversion is Violence, 2009)
  79. Conversion is Violence, Sruti Seva Trust, (Revised edition from AVRPT, 2009)
  80. Pearls of Wisdom, (Revised edition from AVRPT titled Insights, 2007)
  81. Freedom, Sri Gangadhareswar Trust, (Revised edition from AVRPT, 2007)
  82. Gurupurnima (booklet), (New edition from AVRPT, 2009)
  83. Bhagavad Gita Home Study - The Introduction of the Gita
  84. Dakshinamurti (booklet), AVG Anaikatti, Coimbatore
  85. Satsanga with Swami Dayananda Saraswati (booklet)
  86. Understanding between Parents and Children (Some Insights on bringing up Children) (booklet, 10 pages)
  87. Management in the Light of Vedanta
  88. Meditation at Dawn (booklet, 4 pages)
  89. Eight Significant Verses of the Bhagavad Gita, PDF Excerpt
  90. Bhagavad Gita - Ten Essential Verses (booklet), PDF-1, PDF-2
  91. Wedding ceremony based on Hindu Concepts (small brochure), PDF
  92. Pearls of Wisdom to protect Hindu Dharma, Dharma Rakshana Samiti
  93. Desam - Deivam - Dharmam - Its philosophical and practical implications, Dharma Rakshana Samiti
  94. O Hindu! Wake up to your glory, Dharma Rakshana Samiti

Books (in English) published by Arsha Vidya Research and Publication Trust (AVRPT)

The following books have been published by AVRPT. Some of these books are currently out of print or under reprint. Apart from them, the other books can be purchased through avrpt website, leading bookstores and e-commerce platforms.
To purchase eBook as PDF, refer to Teachings of Swami Dayananda App in iOS and Android. Some of these titles are available as Kindle ebooks as well.

Public Talks Series
  1. Living Intelligently, 2006, Reprint 2009 onwards
  2. Successful Living, 2006, Reprint 2008 onwards
  3. Need for Cognitive Change, 2006, Reprint 2009 onwards
  4. Discovering Love, 2006, Reprint 2009 onwards
  5. The Value of Values, 2007, Reprint 2007 onwards, Read Online
  6. Vedic View and Way of Life, 2009, PDF Excerpt
  7. Sādhana & Sādhya, 2013
  8. Talks & Essays - Vol 1 (Part 1 & Part 2), 2017
  9. Talks & Essays - Vol 3 (Part 1 & Part 2), 2018
Upanisad Series
  1. Mundakopanisad Vol 1 & 2, 2006
  2. Kenopanisad, 2008
  3. Taittirīya Upanisad Vol 1 & 2, 2016
  4. Māndūkya Upanisad with Gaudapāda Kārikā (4 volumes), 2022
Vākyavicāra Series [Vedanta (vakya vicara)]
  1. Exploring Vedanta: An inquiry into the significant sentence
    śraddhā-bhakti-dhyāna-yogād avaihi
    ātmānam ced vijānīyāt
    , 2007
Text Translation Series [Sanskrit Text (Translated)]
  1. Srimad Bhagavad Gītā, 2007, Read Online
  2. Sri Rudram, 2010
Moments with Oneself Series
  1. Freedom From Helplessness, 2007
  2. Living vs Getting On, 2007
  3. Insights, 2007
  4. Action and Reaction, 2007
  5. Fundamental Problem, 2007
  6. Problem is You, Solution is You, 2007
  7. Purpose of Prayer, 2007
  8. Vedanta 24x7, 2007
  9. Freedom, 2007
  10. Crisis Management, 2007
  11. Surrender and Freedom, 2007, Borrow and Read Online
  12. The Need for Personal Reorganization, 2008
  13. Freedom in Relationship, 2008
  14. Stress Free Living, 2008
  15. Om Namo Bhagavate Vasudevaya, 2010
  16. Yoga of Objectivity, 2010
  17. Isvara in One's Life, 2012
  18. Pūrnamadah Pūrnamidam, 2014
Stotra Series
  1. Dīpārādhanā, 2008
  2. Prayer Guide, 2008
  3. Sri Dakshinamurti Stotram, 2020
Meditation Series
  1. Morning Meditation Prayers, 2009
  2. What is Meditation, 2010, Read Online
Essays
  1. Do All Religions have the same goal?, 2009, PDF
  2. Conversion is Violence, 2009, PDF
  3. Gurupurnima, 2009
  4. Danam, 2009
  5. Japa, 2009
  6. Can We?, 2009
  7. Moments with Krishna, 2010
  8. Teaching Tradition of Advaita Vedanta, 2009
  9. Compositions of Swami Dayananda, 2010
  10. The True Teacher, 2014
  11. Hinduism …its uniqueness, 2014
Bhagavad Gītā
  1. Bhagavad Gītā Home Study Course (9 volumes), 2011, Read Online
  2. Vision of the Gītā in ten essential verses, 2015
Prakarana
  1. Tattvabodhah, 2012
  2. Sādhana Pañcakam, 2015
  3. Vivekacūdāmani selected verses, 2019
  4. Drg Drśya Viveka, 2022
Brahma Sūtra
  1. Brahmasūtram Catussūtrī, 2016
Biographies
  1. Swami Dayananda Saraswati - Contribution and Writings (deluxe edition), 2011
  2. Swami Dayananda Saraswati - Contribution and Writings (limited edition), 2011
  3. Swami Dayananda Saraswati - Contribution and Writings (normal edition), 2011
  4. Swami Dayananda Saraswati - Teacher of Teachers, 2017

Saturday, January 29, 2022

திருமந்திரம் - ஒன்றவன் தானே

 முதல் தந்திரம் – கடவுள் வாழ்த்து

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தானுணர்ந் தெட்டே. (1)

ஒன்று அவன் தானே

மெய்ப்பொருள் ஒன்றே; இறைவன் ஒருவனே. பரம்பொருள் ஒன்றே; பேரறிவும் பேராற்றலும் பேரருளும் கொண்டது.

இரண்டு அவன் இன்னருள்

1) இறைவன் பேரறிவும் பேராற்றலும் கொண்டவன். பேரறிவுடைய பரம்பொருள் அருள் மழை பொழிவதற்காகப் பேராற்றல் மிக்க இயக்கமாகத் தன்னை மாறிக் கொள்கின்றது. அவன் ஒருவனே என்றாலும் பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பதற்கான சக்தியென்னும் நிலைக்குப் பிரதானம் கொடுத்து இரண்டாக வெளிப்படுகிறான். சிவமும், சக்தியும் சேர்ந்த பரம்பொருளே நமக்குத் தந்தையும் தாயுமாவர். அவர்களே ஊழித்தலைவர்கள். கால இட தத்துவங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். நாதமாயும், விந்துவாயும், ஒலியாயும், ஒளியாயும் அமர்ந்தவர்கள். இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் நிலையில் அருளின் தன்மை விளங்குகின்றது.

2) அவனது அருள், அறக்கருணை, மறக்கருணை என இரண்டாய் இருக்கும், அறக்கருணை அருட் சத்தியும், மறக்கருணை திரோதான சத்தியுமாம். (சொன்னதைக் கேட்டு அதன்படி நடப்போர்க்கு நலம் செய்வது அறக்கருணை எனப்படும். சொன்னதைக்கேட்டு அதன்படி நடவாதாரை அவரவர் தன்மைக்கேற்ப இடர் கொடுத்து அவ்விடரால் அவர்களை நன்னெறிப்படுத்தி நலம் செய்வது மறக்கருணை எனப்படும்).

நின்றனன் மூன்றினுள்

1) பரம்பொருளின் அருள் இயக்கம் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகிய மூன்று நிலைகளில் வெளிப்படுகின்றன. இறைவன் முத்தொழிலைச் செய்கின்றான் என்கிறபோது அது உயிர்களுக்காகச் செய்யப்படுகின்றது என்பதும், அப்படியென்றால் உயிர்கள் பாச நீக்கம் பெற்று, வீடுபேறு அடைவதற்காக இந்தத் தொழில் நடக்கின்றது என்பதும், இதற்காகவே இறைவன் உயிருக்கு உயிராகவும், உயிருக்கு வேறாகவும், உயிரை நடத்திச் செல்லும் நாயகனாகவும் இயங்குகின்றான் என்பது புலனாகும். ஆக, இறைவன் பதி, பசு, பாசம் என்கிற மூன்று பொருள்களிலும் நின்றான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் காரணமான பதியினுடைய இயல்புகள் சத்து, சித்து, ஆனந்தம் ஆகும்.

2) இலயம், போகம், அதிகாரம் என்னும் மூன்று நிலைகளில் நின்றனன். இலயம் என்பது அருவ நிலை, போகம் என்பது அருவுருவ நிலை, அதிகாரம் என்பது உருவ நிலை. 
(இலயம் - ஞானமாத்திரமே திருமேனியாகவுடைய கடவுள்நிலை, போகம் - ஞானமும் கிரியையும் சமமாகவுள்ள நிலை, அதிகாரம் - ஞானங்குறைந்து கிரியை அதிகமாயுள்ள கடவுள் நிலை).

(நின்று – எப்பொழுதும், always, permanently, நிற்றல் – standing, staying)

நான்கு உணர்ந்தான்

1) அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கனையும் தானே உணர்ந்து உலகிற்கு உணர்த்தினான். அறம் முதலிய நான்கு உறுதிப் பொருள்களையே முனிவர் நால்வர்க்கு நான்கு வேதங்களால் உணர்த்தியருளினான். வேத நெறி சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற நான்கு நிலைகளில் வெளிப்படுகின்றது. வேதங்களை உணர்ந்த இறைவன் இந்த நான்கு நெறிகள் மூலமாகவும் உலக மக்களை உணர்விக்கின்றான்.

2) உலகினை இறந்து (கடந்து) நிற்றலும், உலகெலாம் தன்னுருவில் தோன்றி ஒடுங்க நிற்றலும், உலகிற்கு உயிராய் நிற்றலும், உலகாய் நிற்றலும் ஆகிய நான்கு நிலைகளாக உணரப்படுவர் என்று பொருள். விசுவாதிகன், விசுவகாரணன், அந்தர்யாமி, விசுவரூபி என்ற நான்காக உணரப்படுபவர் என்பது கருத்து.

3) விழிப்பு, கனவு, ஆழ் உறக்கம், துரியம் எனும் நான்கு நிலைகளிலே துரிய நிலையை உணர்ந்தவன்.

ஐந்து வென்றனன்

1) செவி முதலிய ஐம்பொறிகளின் வழி நுகரப்படும் ஓசை முதலிய ஐம்புலன்களின் மேல் எழுகின்ற ஐந்து அவாவினையும் வென்றனன்.

2) ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றை வென்றனன்.

3) ஐந்தொழில்களாகிய தோற்றம், காத்தல், ஒடுக்கம், மறைப்பு, அருளல் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம்) ஆகியவற்றை வென்றனன்.

வென்றனன் என்றது, அவற்றொடு பொருந்திநின்றே அவற்றால் திரிபின்றி நின்றான்.

ஆறு விரிந்தனன்

1) மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு அத்துவாக்களாக விரிந்தனன் (அத்துவா - வழி, மந்திரம் பதம், வன்னம் சொற்பிரபஞ்சம் எனவும், புவனம் தத்துவம் கலை பொருட் பிரபஞ்சம் எனவும் பெயர் பெறும். இவை வினையை ஈட்டுவதற்கும் வினையை நுகர்வதற்கும் உரிய வழிகளாம்.)

2) தவத்திரு சுத்தானந்த பாரதியார் அவர்கள் தனது திருமந்திர விளக்க நூலில் இதற்குப் பொருளாக இறைவன் ஆறுவிதமான சமயங்களிலும் விரிந்து நின்றவன் என்று கூறுகிறார். இந்த ஆறு சமயங்களும், பொதுவாக அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம், புறப்புறச்சமயம் என்கிற நான்கு உட்பிரிவுகளில் தங்குகின்றன என்றும், சமயங்கள் எத்தகைய கொள்கைகளைப் பெற்றிருந்தாலும் அல்லது தெய்வங்களை வணங்கினாலும், ஆழ்ந்து நோக்கினால், இறைவன் ஒருவனே என்கின்ற அடிப்படையில் இறைவனே ஆறு சமயங்களாக அவற்றிலுள்ள தத்துவங்களாக மக்களுடைய மனத்திற்குத் தக்கபடி காட்சியளிக்கின்றான் என்கிற பொருளைத் தருகின்றார்.

3) ஓர் அறிவுமுதல் ஆறறிவு ஈறாகவுள்ள அனைத்துயிர்க்கும் அறிவிக்க ஆறாய் விரிந்தனன்

4) ஆதியும் அந்தமும் இல்லாத போதிலும், நாதாந்தம், கலாந்தம், போதாந்தம், யோகாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்று ஆறு அந்தங்களாக விரிந்தனன்.

5) உடலில் ஆறு ஆதாரமாய் விளங்கும் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய சக்திச் சக்கரங்களாக விரிந்தனன்.

6) The meaning of bhagavān is worth noting here (however this interpretation is not found in saiva siddhānta literature) – bhagavān is the one who has bhaga, the six-fold virtues in absolute measure. These are: all knowledge, jñāna; total dispassion, vairāgya; the capacity to create, sustain and resolve, vīrya; absolute fame, yaśas; all wealth, śri; and overlordship, aiśvarya.

ஏழும்பர்ச் சென்றனன்

1) ஏழு உலகங்கள் சென்றனன் (உலகங்கள் அனைத்திலும் வியாபித்து இருத்தல், பரந்து நிறைந்திருத்தல்).

ஒன்று முதலாகத் தொடங்கி ஆறு ஈறாகக் கூறியது, ஒருவனே பலவாய் விரிந்து நிற்கின்றான் என்பது உணர்த்துதற்கு. ஏழும்பர்ச் சென்றனன் என்றது, அவ்வாறு விரிந்து நிற்பினும் அவன் மன வாக்கிற்கு எட்டாதவனே என்றற் பொருட்டு.

2) எழுவகைப் பிறப்பிற்கும் அப்பால்நின்று பிறப்பினை நல்கி இயக்கும் பிறப்பில் பெருமான்.

தான் இருந்தான் – 

தானேயாய் இருந்தான், தானேயாய் இருத்தலாவது சத்தியோடு கூடிச் செயற்படுத்தலைத் தவிர்ந்திருத்தல். இதுவும், முதற்கண் “ஒன்றவன் றானே” என்றதும் இறைவனது, “சொரூபம்” எனப்படும் உண்மை நிலை. ஏனைய, “தடத்தம்” எனப்படும் பொது நிலை.

 உணர்ந்து எட்டே – 
அவனை, நெஞ்சே, நீ அறிந்து அடை.
 

இரத்தினச் சுருக்கமாக மாணிக்கவாசகர் “ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க” என்று வாழ்த்தினார். "நித்தியமாய், நிர்மலமாய், நிட்கலமாய், நிராமயமாய், நிறைவாய், நீங்காச் சுத்தமுமாய், தூரமுமாய், சமீபமுமாய், துரிய நிறைச்சுடராய்" விளங்கும் என்று பரம்பொருளின் தன்மையைத் தாயுமானார் பெருமான் கூறுகின்றார்.

பரம்பொருளின் தன்மையைப் பலவாறாகப் பிரித்துச் சொன்னாலும் எல்லாவற்றிற்கும் மேலாகப் பரம்பொருள் என்பது "சத், சித், ஆனந்தம்" என்றே அழைக்கப்படுகிறது. பரம்பொருளைச் சத்தியம், ஞானம், ஆனந்தம் என்று மறைகள் கூறுகின்றன. பரம்பொருள் அறிவுப் பெருவழி. ஆனந்தத்தின் இருப்பிடம். இங்கே பயன்படுத்தப்படும் சொல் ஆனந்தம். இன்பம் என்று கூறுகின்றபொழுது அதற்கு எதிராகத் துன்பம் என்கிற அனுபவம் உடனேயே வருகின்றது. ஆனால், ஆனந்தம் என்கின்ற நிலைக்கு எதிராகவோ மேலாகவோ ஒரு நிலை கிடையாது. ஆனந்தத்திலிருந்து உயிர்கள் தோன்றின. தோன்றிய உயிர்களெல்லாம் ஆனந்தத்தில் வாழ்கின்றன. இறுதியில் ஆனந்தத்தில் லயமடைகின்றன என்று உபநிடதங்கள் கூறுகின்றன.

இறைவன் உடலிலும், உயிரிலும், அசையும் பொருளிலும், அசையாப் பொருளிலும் இரண்டறக் கலந்துள்ளான். தண்ணீரில் உப்புக் கரைந்திருக்கும் பொழுது உப்பினைத் தனியாகப் பார்க்க முடிவதில்லை. ஆனால், கதிரவனின் வெப்பத்தால் நீர் ஆவியாகும் பொழுது உப்பானது தனியே தங்குகின்றது. அதேபோல இறைவன் தான் படைத்த உயிரினங்களுடன் வேற்றுமையின்றிக் கலந்துள்ளான்.

குறிப்பு: அனன் [அன் (சாரியை) + அன் (விகுதி)] என்னும் சாரியை கூடிய ஈறு, படர்க்கை ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவானதே. அனன் என்பது முக்கால வினைமுற்றிலும் வரக் கூடிய சாரியை. எ-டு: செய்தனன் செய்கின்றனன் செய்வனன்

ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
மூவிடம் – தன்மை, முன்னிலை, படர்க்கை

திருமந்திரம் - ஐந்து கரத்தனை

 விநாயகர் காப்பு

ஐந்து கரத்தனை[1] யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

ஐந்து கரத்தனை - ஐந்து கைகளையும்
யானை முகத்தனை - யானை முகத்தையும்
இந்தின் – சந்திரனது (இந்து – சந்திரன்)
இளம்பிறை போலும் - இளமை நிலையாகிய பிறைபோலும் (crescent shaped)
எயிற்றனை - தந்தத்தையும் உடையவரும் (எயிறு - tusk of an elephant)
நந்தி மகன்தனை - சிவபிரானுக்குப் புதல்வரும் (நந்தி – சிவன்)
ஞானக் கொழுந்தினைப் - ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை (கொழுந்து – சுடர்)
புந்தியில் வைத்து - உள்ளத்தில் வைத்து (புந்தி has 2 meanings - புத்தி, மனம்)
அடி போற்றுகின்றேனே - அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.



[1] In a few texts this verse starts with அந்தி நிறத்தனை