விநாயகர் காப்பு
ஐந்து கரத்தனை[1] யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
ஐந்து கரத்தனை -
ஐந்து கைகளையும்
யானை முகத்தனை -
யானை முகத்தையும்
இந்தின் –
சந்திரனது (இந்து – சந்திரன்)
இளம்பிறை போலும் -
இளமை நிலையாகிய பிறைபோலும் (crescent shaped)
எயிற்றனை
- தந்தத்தையும் உடையவரும் (எயிறு - tusk of an elephant)
நந்தி மகன்தனை -
சிவபிரானுக்குப் புதல்வரும் (நந்தி – சிவன்)
ஞானக் கொழுந்தினைப் -
ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை (கொழுந்து – சுடர்)
புந்தியில் வைத்து -
உள்ளத்தில் வைத்து (புந்தி has 2 meanings - புத்தி, மனம்)
அடி போற்றுகின்றேனே -
அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.
[1] In a few texts this verse starts with அந்தி நிறத்தனை
No comments:
Post a Comment