தஞ்சை மாநகரில் வெங்கிடஸ்வாமி ராஜு - பாப்பம்மாள் தம்பதியருக்கு கலி-4968-௵ கொல்லம் 1042-௵ அக்ஷய-௵ பங்குனி-௴ இரண்டாம் தினத்தில் (14-03-1867) குருவாரமும் பூர்வபக்ஷமும் நவமியினந்தமும் திருவாதிரை நக்ஷத்திரம் நாலாம் பாதமும் கூடிய சுபதினத்தில் விருச்சிக லக்கினத்தில் சின்மயானந்த சிவசொரூபத்திருவருளே ஓர் மகவாய் அவதரித்தது. அம்மகவிற்கு குப்புஸ்வாமி என்னும் நாமகரணமிட்டு அன்போடு வளர்த்து வந்தனர். ஸ்ரீ சுவாமிகள் தமிழ். தெலுங்கு, சமஸ்கிருதம், கன்னடம், மராட்டி, ஹிந்தி, மலையாளம், சிங்களம், பெங்காலி, ஆங்கிலம் எனப்பல மொழிகளைக் கற்றுணர்ந்தார்கள்.
பிரஹ்ம நிஷ்ட பண்டித வெ. குப்புஸ்வாமி ராஜு என்னும் பூர்வாசிர நாமம் பூண்டிருந்த ஸ்ரீ பிரஹ்மாநந்த ஸ்வாமிகள் நிஷ்காம்ய கர்மம், பக்தி என்னும் மார்கத்தினும், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், (நிற்விகற்ப) சமாதி என்னும் யோகா மார்கத்தினும், விவேகம், வைராக்கியம், சட்சம்பத்தி (சமம், தமம், உபரதி, திதீக்ஷை, சமாதானம், சிரத்தை), முமுக்ஷுத்துவம் என்னும் ஞானசாதன மார்கத்தினும், உபதேசித்தும், நடந்துகாட்டியும், மேற்சொல்லிய சாதனங்களுக்குறிய அநேக நூல்களையும் தமிழில் வெளியிட்டார். அவர்கள் உரை எழுதி வெளியிட்ட நூல்கள் இந்தப் பதிவில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூல்கள் அனைத்தும் PDF வடிவில் உள்ளன.
இவ்வரிய நூல்களை மின்னாக்கம் செய்து பதிவேற்றிய அன்பு உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றி.
ஆண்டு: தலைப்பு (பகுப்பு, பதிப்பு)
1896: ஹடயோகப்பிரதீபிகை (யோக நூல், 1st Ed)
1898: தருக்ககௌமுதி (தர்க்கம், 1st Ed)
1898: போதாரியை என்னும் சுவாத்துமநிரூபணம் (வேதாந்த நூல்)
1901: ஸ்ரீ விருத்திப் பிரபாகரம் (வேதாந்த நூல், 1st Ed)
1902: ஸ்ரீ விருத்திரத்நாவலி (வேதாந்த நூல், 1st Ed)
1902: ஸ்ரீ பாலபோதம் (வேதாந்த நூல், 1st Ed)
1905: அபரோக்ஷாநுபூதி (சங்கர கிரந்தாவலி 1)
1906: விவேகசிந்தாமணியில் வேதாந்தபரிச்சேதம் (வேதாந்த நூல், 1st Ed)
1906: ஹடயோகப்பிரதீபிகை (யோக நூல், 2nd Ed)
1906: பிரஹ்மவிதாசீர்வாதபத்ததி மூலம் (1st Ed)
1908: ஸ்ரீ பஞ்சதசி vol 1 (வேதாந்த நூல், 1st Ed - Reprint in 2007)
1908: ஸ்ரீ பஞ்சதசி vol 2 (வேதாந்த நூல், 1st Ed - Reprint in 2007)
1908: ஸ்ரீ பஞ்சதசி vol 2 (வேதாந்த நூல், 1st Ed - Original edition)
1909: தருக்ககௌமுதியும், நியாயபதார்த்தம் பதினாறும் டிப்பணியுடன் (தர்க்கம், 2nd Ed)
1909: ஸ்ரீ ராமகீதை (கீதைக்கொத்து 2)
1909: ஸ்ரீ விசாரசந்திரோதயம் (வேதாந்த நூல், 2nd Ed)
1910: ஆத்மபோதமும் தத்துவபோதமும் (சங்கர கிரந்தாவலி 2)
1911: ஸ்ரீ சங்கராசாரிய, நீலகண்டாசாரிய சம்வாதம் (வேதாந்த நூல்)
1912: உத்தரகீதை (கீதைக்கொத்து 1, 2nd Ed)
1912: நானாஜீவவாதக்கட்டளைச் செய்யுள் (வேதாந்த நூல்
1914: ஸ்ரீ பஞ்சீகரண முதலியன (சங்கர கிரந்தாவலி 3)
1915: சிவயோகப்பிரதீபிகை (யோக நூல்)
1915: ஸ்ரீ பாலபோதம் (வேதாந்த நூல், 2nd Ed)
1916: ஸ்ரீ சிவஞான போத ஸம்ஸ்கிருத மூலமும் தத்துவப்பிரகாசிகை யென்னும் தமிழுரையும் (ஞான நூல்)
1916: ஸ்ரீ நந்திகேசுவரகாசிகையும் தத்துவவிமர்சினிவியாக்கியானமும்
1918: ஸ்ரீ தேவிகீதை (கீதைக்கொத்து 4)
1919: கைவல்யோபநிடதம் அமிருதபிந்தூபநிடதம் சுகரகசியோபநிடதம் ஸ்கந்தோபநிடதம் (உபநிடதம்)
1921: ஸ்ரீ சுருதிஷட்லிங்கசங்கிரகம் (உபநிடதம்)
1921: ஸ்ரீ நாரதபக்திசூத்திரம் (சூத்திரம்)
1921: ஆத்மபோதமும் தத்துவபோதமும் (சங்கர கிரந்தாவலி 2, 2nd Ed)
1921: பிரஹ்மவிதாசீர்வாதபத்ததி மூலம்
1923: அஷ்டாங்க யோக சூத்திரம் (சூத்திரம்)
1923: தத்துவமஸிமகாவாக்கிய உபதேசம் (உபநிடதம், 3rd Ed)
1923: ஸ்ரீ விசாரசந்திரோதயம் (வேதாந்த நூல், 4th Ed)
1923: ஸ்ரீ பகவத்கீதை (கீதைக்கொத்து 5)
1923: ஸ்ரீ பிரமானந்தசுவாமிகள்பேரில் நான்மணிமாலை (சரித்திரம்)
1925: ஸ்ரீ குருபுஜங்கஸ்தோத்திரம் (சங்கர கிரந்தாவலி 4)
1925: ஸ்ரீ வைஷ்ணவ அஷ்டாக்ஷர மந்திரார்த்த சங்கிரகம் (மந்திரம்)
1925: கீதாச்சாரத்தாலாட்டு (கீதைக்கொத்து 6, 2nd Ed)
1926: ஸ்ரீ விருத்திப் பிரபாகரம் (வேதாந்த நூல்)
1927: அபரோக்ஷாநுபூதி (சங்கர கிரந்தாவலி 1)
1927: பிரச்நோத்ராத்நமாலிகா (சங்கர கிரந்தாவலி 5)
1928: சிவஞானபோதம் இலகு டீகை உரையுடன் (ஞான நூல்)
1928: ஸ்ரீ பிரஹ்மாநந்தக் கட்டளை
1929: உத்தரகீதை (கீதைக்கொத்து 1, 3rd Ed)
1929: யோகதாராவலி (சங்கர கிரந்தாவலி 6?) - yet to find
1929: ஸ்ரீ கணேச கீதை (கீதைக்கொத்து 7?) - yet to find
1931: ஸ்ரீ குருகீதை (கீதைக்கொத்து 3, 2nd Ed)
1933: ஸ்ரீ சர்வஞானோத்தரம்
1933: சதாசாரம் (சங்கர கிரந்தாவலி 7)
1933: ஆத்ம அநாத்ம விவேகம் (சங்கர கிரந்தாவலி 8)
1936: ஜீவன் முக்தி விவேகம் (வேதாந்த நூல்)
1940: விவேகசிந்தாமணியில் வேதாந்தபரிச்சேதம் (வேதாந்த நூல், 2nd Ed)
1942: கீதாச்சாரத்தாலாட்டு (கீதைக்கொத்து 6, 3rd Ed)
1944: ஸ்ரீ விருத்திரத்நாவலி (வேதாந்த நூல், 2nd Ed)
கலி-5023-௵ கொல்லம் 1097-௵ துன்மதி-௵ புரட்டாசி-௴ முதல் தேதி வெள்ளிக்கிழமை பௌர்ணமி அன்று (16-09-1921) திருச்சிராப்பள்ளி ஜில்லா துறையூர்க்கடுத்த சிக்கத்தம்பூர் (பாளையம்) என்னும் திவ்யஸ்தலத்தில் மகாபுண்ணியமும் தபசும் ஞானைஸ்வர்யமும் நிறைந்த திருவவதாரத்திருமேனியினின்றும் ப்ரஹ்மஸ்வரூபத்தில் ஐக்கியமடைந்தார்கள்.
Note: All external links are from various websites found across the Internet. The purpose of this page is to collate and share the available information across various sites in one place.